பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்41


O

இது-

ஒட்டகங்களைக்

குட்டி ஆடுகளாகக்

குறுக்கிக்காட்டுகிற

ஒற்றைக்கண் பிரம்மா.

O

சமவெளிகளில்

பூவரசம் இலைகளில்

புல்லாங்குழல் ஊதுபவர்களைக் கேட்டு

காளைமாடுகளுக்கெல்லாம்

காம்புகள் முளைத்து விடுகின்றன !

O

பசுமாடுகளுக்கோ-

பால்வழிகிற இடத்தில்

நெய் ஆறுகள்

முகம் கழுவிக்கொள்கின்றன !

O

இந்தப் பாலைவனத்திலோ

விருட்ச விரல்களில்

காற்று-

சொடுக்குப் போடுகிறது!

O

அந்த-

அச்சத்தில் நடுங்கும்

ஆடுகளால் ...