பக்கம் எண் :

42 வலம்புரி ஜான்


மணல் பூக்களுக்கு

அல்லிவட்டங்கள்

அதிர்ந்து விடுகின்றன !

O

இருப்பினும்...

எல்லாப் பாத்திரங்களிலும்

காற்றை நிரப்பிவிட்டு

நுரையீரல் துருத்திகளில் ...

நுரையைக் கூட

வடிகட்டி விடுகின்ற

இந்த-

பாலைவனத்தை நான்

நேசிக்கிறேன் !

O

காரணம் ...

இது-

நபிகள் நாயகம் அவர்களின்

நினைவுச் சுவடுகளுக்கு

பட்டாபிஷேகம் நடத்திய

பழம்பெரும் பூமி !

O

ஆயிரத்து நானூறு

ஆண்டுகளுக்கு முன்னே

முழங்கிய நபிகளின் குரலை