பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்425


மூலைக்கல்லே முதற்கல்லாயிற்று !

   

O

 

* கட்டிடத்திற்கு ஆகாதென்று

தள்ளப்பட்ட மூலைக்கல்லே

கட்டிடத்திற்கு

முதற்கல் ஆயிற்று!

என்பதுபோல...

சாவி என்று

ஒரு காலத்தில்

சலிக்கப்படாத

நபிகள் நாதரை...

நெல்வயல் என்று

நிலமெலாம் சொன்னது!

 

O

 

மாட்டின் வாலென்றுகூட

ஒரு காலத்தில்

கருதப்படாதவர்

இப்போது மடி என்று

மதிக்கப்பட்டார்.

 

O

 

ஒரு காலத்தின்

எச்சில் இன்று

தாம்பூலம் ஆனது.

 

விவிலிய வசனம். (பைபிள்)