பக்கம் எண் :

428 வலம்புரி ஜான்


எங்கு படர்ந்தாலும்

கிளைகள் -

வேரிருக்கும் இடத்தை

விட்டுவிட இயலுமா?

 

O

 

அண்ணல்

கனவொன்று கண்டார்.

மக்காவில்

இறைவனைத் தொழுது

ஒட்டகங்களைப் பலியிடுவதாக.

கனவு மனிதனுக்கு இறைவனின்

மடல் என்று கருதினார்.

 

O

 

ஆயிரத்து நானூறுபேர்கள்

அணிவகுத்தனர்.

ஆயுதம் தரிப்போம்;

குறைசிகள் விடமாட்டார்

அமைதியாக -

இப்படிச்சிலர்...

பயணத்திற்கான

உடைவாள் தவிர

ஆயுதம் வேண்டாம்

அண்ணல் மொழிந்தார்.