பக்கம் எண் :

430 வலம்புரி ஜான்


தடுத்தால்

ஒரு துளிக்குருதி

உள்ளவரை

போராடுவேன்;

அல்லாமீது ஆணையிட்டார்.

உறுதியாக நடந்தார்.

 

O

 

அவரது-

குதிங்கால் நரம்புகள்

கொடிக்கம்பங்களாயின.

 

O

 

ஓரிடம் வந்ததும்

அண்ணலின் ஒட்டகம்...

ஒடுங்கி நின்றது.

தானே நின்றதாய்

தனையர் நினைத்தனர்.

 

O

 

அபிரகாவின்

ஆனைப்படையை

நிறுத்திய இறைவனே

நிறுத்தினான் இதனை-

அண்ணல் அறைந்தார்.

 

O

 

கூடாரம் அங்கே

கொடி பிடித்தது.