பக்கம் எண் :

438 வலம்புரி ஜான்


திருமுகங்களின் திருவிழா !

 

 

O

 

உரோமானியப் பேரரசர்

சீசர் சிரியாவில்

உலாவந்தார்.

அவைகூடியது.

 

O

 

அமைச்சர்களோ

அச்சுப்பிரதிகளைப்போல

அசையாதிருந்தனர்.

 

O

 

மன்னன் -

மௌன நூலாம்படையை...

நாக்கு நெம்புகோலால்

நகர்த்தினான் !

 

O

 

காரணம் -

கடிதம் ஒன்றை

எழுத்தெண்ணிப்படித்தவேந்தன்

எழுந்து விழுந்து

குழம்பி முடித்தான்.

 

O

 

அரபு நாட்டிலிருந்து

ஆட்கள் வந்தனரா ?-