பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்439


வேந்தர் வேந்தன்

வினவினான்.

 

O

 

குறைசிகள் சிலரைக்

கூட்டி வந்தனர்.

 

O

 

அண்ணலாரின்

அழிவைப் பார்க்கவே

அகலக்கண் பெற்ற

அபூசுப்யானும்

அவர்களில் ஒருவர்.

 

O

 

உங்கள் நாட்டில்

ஒருவர் தம்மை

நபிஎன்றாராமே !

அவர் தம் உறவினர்

அவையிலிருந்தால்

அறிவித்திடுக என்றான்

அரசன்.

 

O

 

நெருங்கிய உறவினன்

நான் தான் என்றார்

அபூசுப்யான்.