திருமணத் தேதி குறிக்கும் கடவுள் எழுதிய கடைசிக் கவிதை கண் விழித்த தொட்டில் ! O மணல் மகுடத்தை இரவிலும் கழற்றாத இந்தச் சர்வாதிகாரக்காற்று ... அவரது பாத வளையங்களுக்குள்ளேதான் பதுங்கிக்கிடந்தது ! O எனவேதான் - இந்தப் பாலைவனத்தை நான் நேசிக்கிறேன் ! ... O மணல்வெளிகள்... பேரீச்சை மரங்கள் ... ஒட்டகங்கள் ... ஒற்றைப்பிறை ... அம்மா மடியில் - என் அரசாங்கம் நடந்த நாள் தொட்டு கனவுச் சோளிகளாக இதய நிலத்தில் இவை- விழுந்து எழுந்தவை ! |