பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்45


O

இவை-

சூரியனின் மறுபக்கத்தில்

கூடுகட்டப்போன

மழைக்குருவிகள் !

O

என்னைப்பிழிந்த போது ...

எழுந்த -

எனது

நுலாம்படையிலும்

நுண்ணிய உயிர்கள்

மணல் வெளிகள் ...

பேரீச்சை மரங்கள் ...

உள்ள ஒடுக்கம்

O

நபிகள் நாதரை

கவிதை நதியில்

காட்டமுனைவேன்

ஒருநாள் ... என்பது ...

காலத்தின் கருவில்

பால் மகரந்தமாய்

பதுங்கி இருந்ததோ?

O

நபிகள் நாதரை

நானா எழுதுவேன்?