பக்கம் எண் :

46 வலம்புரி ஜான்


O

அசைப்பவர் இன்றி

எழுதுகோல் ஒன்று

அதுவாய் எழுதுதல்

ஆவிக்கதைகளில்

வருவது உண்டு.

ஆன்ற வாழ்க்கையில்

அமைவது உண்டா?

O

நானா எழுதுவேன்?

O

எனக்குள்ளிருந்து

ஏதோ ஒன்று

இதயத்தாளில்

இயற்றும் எழுத்தை ...

முன்னவர் நோற்ற

தவம் என்பேனா? - என்

தலைமுறைத்தாய்களின்

கனவென்பேனா?

*