பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்441


நபி என்று தம்மை

நவின்றாரா ?

-இல்லவே இல்லை.

 

O

 

அவரை நிழல்போல்

பின்பற்றுவோர்

பணம் படைத்தோரா?

பஞ்சை பராரிகளா?

-பஞ்சைகள்.

 

O

 

அவரைப் பின்பற்றுவோர்

தொகை

வளர்ந்ததா ?

தளர்ந்ததா ?

-வளர்ந்தே வருகிறது.

 

O

 

போர்களில் அவருக்கு

வெற்றியா ? வீழ்ச்சியா ?

-சிலவேளை இப்படி ;

சிலவேளை அப்படி.

 

O

 

அந்த அறவாணரின்

அறிவுரை என்ன ?

-இறைவன் ஒருவனே

இணைவைத்தல் ஆகாது.