பக்கம் எண் :

444 வலம்புரி ஜான்


இறைவன் பெயரையும்

நபிகள் பெயரையும்

பொறித்தது கண்டு

பொங்கினான்.

 

O

 

எமன் நாட்டில் உள்ள

அதிகாரிகளுக்கு

அண்ணலைப் பிடித்துவர

ஆணையிட்டான்.

 

O

 

பொறுத்திருங்கள்

என்றார்

போதகர்.

 

O

 

இரவின் காதுகள்...

நபிகளின் தொழுகையால்

குண்டலம் அணிந்தன !

 

O

 

அண்ணலின் கண்கள்

அழுதே சிவந்தன !

சிறுதூக்கம்

சிறகு சேர்த்தது.