பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்451


அப்போது அண்ணல்,

அல்லா

கேளாச் செவியோன்

அல்லவே அல்லன்.

உங்களோடு உள்ளவனிடம்

உரக்க ஏன் பேசவேண்டும் ?

என்றார்கள்.

 

O

 

இருபதாயிரம் வீரர்கள்

எதிர்த்து நின்றனர்.

இத்தோடு

முடிந்து போனார்

முகம்மது என்று

காட்டு அரபிகள்

கழறினர்.

 

O

 

முற்றுகை...

சிந்துபாத் கதையாக

சிறகை நீட்டியது !

 

O

 

சூதரின் கோட்டைகள்

சுருண்டு விழுந்தன.

மணிமுடிக் கோட்டை

ஒன்று மாத்திரம்

மதர்த்து நின்றது.