பக்கம் எண் :

452 வலம்புரி ஜான்


அபூபக்கர், உமர்

அனைவரும்

கைகளோடு திரும்பினர்.

 

O

 

அலீக்கோ கண்நோய்

இருந்தும் அண்ணலார் ஆணை !

தொண்ணூற்று மூன்று

சூதர்களை -

பனங்குலைகளை

பாளைஅரிவாள்

பதம்பார்ப்பது போல...

அலீயின் அமரவாள்

அரிந்து அடுக்கியது !

 

O

 

சபிய்யா என்ற

சூதப் பெண்ணோ

நரம்புகள் இல்லாத

வீணையாய் ஆனாள்...

அண்ணல் அவளை

ஆதரிக்கவென்று

மனைவியாய்

ஏற்றார்.

 

O

 

சபிய்யாவைத் தாங்கினால்

சமாதானம் ஆவர் சூதர் -

சாந்தநபி எதிர்பார்த்தார்.