பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம் 453


அவர்கள்

அவர்களாகவே இருந்தார்கள் !

O

கைபரில்

கயல்விழி ஒன்று

வள்ளலை, நண்பரை

விருந்துக்கு அழைத்தது.

O

அள்ளி உண்ணுங்கால்

அமுதம் அன்றென

அண்ணல் கண்டார்

நண்பரோ நஞ்சில்

நடுங்கியே செத்தார்.

O

உண்மையினைச்

சொல்லென்றார்-

உயர்ந்த வள்ளல்.

நீங்கள் -

நபியாயிருப்பின்

* நீலம் தங்களை

நெருங்காதன்றோ ?

சூதர் சொன்னது

சூழ்ச்சி என்றறிந்தும்

மன்னிப்பருளினார்

மாநாபிமணிகள்.

  *

 

* நீலம் - நஞ்சு