பக்கம் எண் :

454 வலம்புரி ஜான்


மதீனா மலர் தூவுகிறது !

 

 

O

 

மதீனா -

அமைதிக்கடலில்

ஆழ்ந்து கிடந்தது.

 

O

 

புல்லின் தலையை

வருடிவிடுகிற

பனித்துளி கூட...

ஓசையின்றி

உதிர்ந்து விழுந்தது !

 

O

 

கன்னிப்பெண்களின்

பாதக்கொலுசுகள்

வாய்களுக்கெல்லாம்

வாய்தா வாங்கின !

 

O

 

அரபிகள் பலரும்

அண்ணலை நாடினர்.

 

O

 

அண்ணல்

இரண்டாயிரம்

முஸ்லிம்களோடு