பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்461


தர்ப்பூசணிப்பழங்கள்

வாய்திறக்காமலே

தாம்பூலம் தரித்தன !

 

O

 

ஆம் ;

அன்றுதான்

சதை நகத்தோடு சேர்ந்தது.

நாயகம் மதீனா திரும்பினார்.

 

O

 

உரிந்த சட்டைகள்

ஒன்றுவதற்காகப்

பாம்புகளைத் தேடின !

 

O

 

ஆடினர் பாடினர் அக்களிப் பாகினர் !

ஆனந்தக் கும்மியில் வானவர் ஆகினர் !

அல்லிகள் அன்றைக்கு காலை மலர்ந்தன !

ஆதவன் மாதவம் அள்ளி மகிழ்ந்தன.

 

O

 

நிறைமாதம் ஆகாத முத்துக்கள் ஆயிரம்

சிறைச்சிப்பி திறந்தன ; சிந்தை

குளிர்ந்தன !

விசிறிடும் சிட்டுக்கள் வியர்வையில்

ஆடின ! விழிக்குள் முகம்மதை

படமெடுத்துப் பார்த்தன !