பக்கம் எண் :

50 வலம்புரி ஜான்


மூடநம்பிக்கைகளின் முகாம் !

O

அரேபியர்கள் -

நான்கு கற்களோடு

பயணப்பட்டால்

மூன்று

சமைப்பதற்காக.

நான்காவது கல்

கும்பிடுவதற்காக.

மணலுக்குள்

இடுப்புவரை

இறங்கி நிற்கும் !

O

இரக்கத்தின் கவிதையான

பசுவின் வாலில் ...

வைக்கோலைச் சுற்றி

வைத்தனர் நெருப்பு.

அந்த -

நடமாடும் மாதவரத்தை

அடித்து விரட்டினர்

அடிவாரம் வரைக்கும் !

O

உச்சியிலிருந்தே

உற்றுப் பார்த்தனர்.

வருணன் வருவான்

என்றே நினைத்தனர் !