கடவுள் எழுதிய கடிதம் ! O விடிய மறுத்த இரவுப் பொறியில் ... அரேபியா இறுகிக்கிடந்தது ! O கடலே வற்றிப்போகிற போதும் ... கண்ணீரிலிருந்து உப்பு வண்டிகளை ஊர்வலம் விடுகிற இறைவன் பார்த்தான் ! O பருவே முகமாகிப்போன ... சிறைச்சாலையே தேசமாகிப்போன ... தொழுநோயே தேகமாகிப்போன - அரேபியாவிற்குள் - தன் உயிர்த்தென்றலை உலவ விட்டான் ! O வெளிச்சத்திற்கு விலாசம் கிடைத்தது ... மதங்கள் விழுந்தன ! மார்க்கம் எழுந்தது ! |