பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்61


O

முற்றத்தில் மேகம்

குடத்தோடு
முற்றுகை இட்டது போல

‘ஹலீமா’ குழந்தைக்காக

வீட்டுக்கு வீடு வந்தாள் !

ஆனால் ...

பனீச அத் வம்சத்துப்

பெண்கள்

ஆளுக்கொன்றாய்

குழந்தைப் பூக்களைக்

கொய்து விட்டனர் !

O

ஹலீமா வந்தபோது

மக்கா நகரத்திற்குள்

ஏறத்தாழ

விரல்கள் இருந்தன ;

வீணைகள் இல்லை !

O

விரல்களை விரித்தால் ...

காற்றுக்கு வலிக்கும் என்று

மூடிக்கொண்டே பிறந்த

முகம்மது மாத்திரம் இருந்தார் !

O

பாட்டனார் முத்தலீஃப்

ஹலீமாவைச்

சந்தித்தார் ...