பக்கம் எண் :

64 வலம்புரி ஜான்


ஹலீமாவின் கனவு !

O

அவளோ ...

வருகிற வழியில்

கண்ட கனவில் கரைந்தாள் !

வம்சத்துப் பெண்கள்

வட்ட மடித்தார்கள் ...

புள்ளியாய் ஒடுங்கினாள் ஹலீமா !

O

சோலை நிழலில்

வெளிச்சப் புள்ளிகள்

விழுந்து குதித்தன ...

O

ஏறிவந்த

கோவேறு கழுதை

பொய்க்கால் குதிரையாய்

பொலிந்து நின்றது !

O

பேரீச்சம் பழம் ஒன்று

முன் அறிவிப்பு

ஒன்றும் இன்றி ...

ஹலீமாவின் வாயில் விழுந்தது ...

O

தீஞ்சுவைத்தேனும் கெட்டது ;

தினைமாவின் நினைவும் விட்டது