பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்65


அப்படி ஓர் சுவை

அதிலே இருந்தது !

O

வாயில் விழுந்த

வண்ணக்கனி இதோ

வாவென்றே அழைக்கிறது !

O

மயில்குஞ்சு ஒன்று

எங்கிருந்தோ ...

மேகத்திற்குப்

புதுக்கவிதை எழுதுகிறது !

O

ஹலீமா புறப்பட்டாள் -

அசைக்கப்பட்ட பந்தல்கால் ...

ஆழமாக இறங்குவது போல்

உறுதியாகிவிட்டாள் !

O

இதுவே என் குழந்தை

இப்போதே வேண்டும் என்றாள்

முத்தலீஃப் முகம்

அந்தி வானத்தை விட

அழகாய் மலர்ந்தது !