காலக் குரல் ! O வேரும் விழுதும் கைகுலுக்கிக் கொண்டன ! O நகக்கண்களுக்குள் நயாகராவை இழுத்துக் கொண்ட ஆதாமின் குமாரனைத்தான் அணைத்துக் கொண்டு போகிறோம் என்று - அப்போது ஹலீமா அறியமாட்டாள் ! O சிப்பிக்குள்ளே தான் முகம் பார்த்துக் கொள்ளுகிற முத்து ஒன்று யோக நித்திரையில் இப்போது இருக்கிறது என்பதை - அந்த பணிப்பெண்கள் அறிய மாட்டார்கள் ! O மழைக்கு முன் வருகிற மண்வாசனை மழை முடிந்தால் ... நாசித் துவாரங்களிலிருந்து |