வள்ளல் வளர்ந்தார் ! O முகம்மது வளர வளர அற்புதங்கள் தங்களுக்கு அரைஞாண்கயிறு கட்டிக்கொண்டன ... அற்புதங்களா ? O இயற்கையே ஓர் அற்புதம்தான். ஆளில்லாக் காட்டிற்குள் ஆயிரமாய் பூமலரும். ஆருமில்லை பார்ப்பதற்கு அப்புறம் ஏன் பூக்கிறது? O காதில் முடி வளர்கிறது ... காது இப்போது வளர்கிறதா ? O கல்லுக்குள் தேரை ... நினைத்தால் பொறிக்கிற ஆமை ... உயர்ந்தே பிறக்கின்ற ஒட்டகச் சிவிங்கி ... தூக்கத்தில் சிரிக்கும் குழந்தை ... தொட்டிக்குள் சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும் |