பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்69


வள்ளல் வளர்ந்தார் !

O

முகம்மது வளர வளர

அற்புதங்கள் தங்களுக்கு

அரைஞாண்கயிறு

கட்டிக்கொண்டன ...

அற்புதங்களா ?

O

இயற்கையே ஓர் அற்புதம்தான்.

ஆளில்லாக் காட்டிற்குள்

ஆயிரமாய் பூமலரும்.

ஆருமில்லை பார்ப்பதற்கு

அப்புறம் ஏன் பூக்கிறது?

O

காதில் முடி வளர்கிறது ...

காது இப்போது வளர்கிறதா ?

O

கல்லுக்குள் தேரை ...

நினைத்தால் பொறிக்கிற ஆமை ...

உயர்ந்தே பிறக்கின்ற

ஒட்டகச் சிவிங்கி ...

தூக்கத்தில் சிரிக்கும் குழந்தை ...

தொட்டிக்குள்

சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கும்