பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்71


அப்போதும்

களவாடப்பட்ட சிரிப்பு

உரியவர்களிடம்

ஒப்படைக்கப்படுவதில்லை !

O

இந்த உலகம்

அற்புதத்தில் அவதரித்து

அநியாயத்தில் நடக்கிறது !

O

ஆறுமாதத்திற்கு ஒரு தடவை

‘ஹலீமா’

முகம்மது என்கிற வெளிச்சத்தை

ஆமினாவின் கண்களில்

விதைத்துவிட்டுப் போவாள் !

O

இதயம் நிறைந்த தனது

இசைப்பாடல் ...

பல்லவியைத்தாண்டி

அனுபல்லவிக்குள்

அடியெடுத்து வைப்பதைப்

பார்த்துப் பார்த்து

ஆமீனா பூரித்துப் போனாள் !

O

வானம் தனது எல்லைகளை

அகலமாக்கிக் கொண்டால் ...

பறந்து பார்க்க வேண்டும் என்று

பட்டது அவளுக்கு !