O இரண்டு வருடம் இனிதே நிறைந்தது ... முகம்மது பால் குடிப்பதை நிறுத்தினார் ... O இயற்கைக்குப் பருவங்கள் இறக்கைக் கட்டித் திரும்புகின்றன. வருடம் வந்தால் வசந்தம் வரும். மனிதனுக்குத்தான் கடந்துபோன பருவங்கள் நடந்துகூட வருவதில்லை ! பால் குடி மறந்த பாலகன் ! O பால்குடி மறந்த முகம்மதுவை ‘ஹலீமா’ அம்மா ஆமீனாவிடம் ஒப்படைத்தாள். கட்டி முடிக்கப்பட்ட அணைக்கட்டு திறக்கப்படுகிற அன்றைக்கு ஊரே மகிழும் ! ஆனால் ... O அடுத்த வேலைக்காகக் காத்திருக்கத் தொடங்குகிற |