பக்கம் எண் :

74 வலம்புரி ஜான்


O

 

தாயே - என்

சகோதரர்கள் எங்கே? என்றார்

ஒருநாள் ...

ஹலீமாவின்

பிடித்து வைத்த

பிரதிகளைத்தான்

முகம்மது - சகோதரர்கள் என்று

சாற்றினார்.

 

O

 

அன்பே!

அவர்களெல்லாம்

ஆடுமேய்க்கப்

போயிருக்கிறார்கள் ...

வியர்வையால்

விதியை எழுதும் கதிரவன்

மேற்குப் படித்துறைகளில்

சலங்கைகளை அவிழ்க்கும்

சாயங்காலத்தில்

அவர்கள் திரும்புவார்கள்

என்றாள் !

 

ஆடு மேய்த்த அண்ணல்

 

O

 

அன்றிலிருந்து ...

முகம்மது -

ஆடு மேய்ப்பதில்

ஆனந்தம் கண்டார் !