பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்79


O

 

முகம்மது

ஆமணக்குச் செடியாய்

அழகு காட்டினார்!

 

O

 

ஆமணக்கு ...

வெடித்தால் விழும்.

விழுந்த இடத்தில் எழும்.

மற்ற சிறுவர்கள் ...

இலவம் பஞ்சாய்

எங்கும் அலைந்தனர் !

 

O

 

அப்போதுதான் அந்த

அதிசயம் நிகழ்ந்தது ...

 

O

 

பாலாடைக் கட்டிக்கும்

பனிக்கட்டிக்கும்

கால்கை முளைத்தால்

எப்படி இருக்குமோ ...

அப்படி இருவர் வந்தனர் !

 

O

 

முகம்மது அவர்களை

மல்லாந்து படுக்கவைத்தனர்.

மார்பினைப் பிளந்தனர் ;

ஏதோ ஒன்றினை

எளிதாய் அகற்றி விட்டு