O அதிசயக் குழந்தையை ஆமீனாவிடம் அழைத்து வந்தனர் ... O சோளக் கொல்லை பொம்மையாயிருந்து ... நாயகன் வரவால் உயிர் பெற்றெழுந்த ஹலீமா அம்மா, மீண்டும் இன்று பொம்மையாய் ஆனாள்! O பொம்மை அழுதது ... பொழுதெலாம் அழுதது. இலையுதிர்காலம் பற்றி இக்பால் எழுதிய கவிதையாய் ஆனாள் ஹலீமா அம்மா ! O தூக்கம் வருகிற போது குழந்தைகளின் கைகளிலிருந்து பொம்மைகள் நழுவி விழுமே அதுபோல் இலைகள் மரங்களிலிருந்து சந்தடி இன்றி மண்ணில் உதிரும் என்றான் இக்பால். |