பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்83


உம்மு அய்மன் என்றவளும்

மதீனா நோக்கி நகர்ந்தார்கள்!

 

O

 

திரும்பி மூவரும் வருங்காலை

திடுமென ...

அப்வாஹ் எனுமிடத்தில்

அன்னையர் திலகம் ஆமீனா

அல்லாவிடத்தில்

அடங்கிவிட்டார் !

முப்பது வயதினில்

முடிந்தது அவர் கதை !

 

O

 

வீணை அறுந்தது !

விடி விளக்கணைந்தது !

வில் முறிந்து போனது !

 

O

 

விவேக சிந்தாமணி

விழுந்துடைந்து போனது !

என்ன எழுத ...

இனிநான் எதை எழுத ...

வானம் கிழிந்தது ;

உடுக்கள் உதறின !

உப்புக்கரித்த க டல்

ஒரு கோடிக் கண்களிலே

ஓங்கி அடித்தது ;

ஓசையின்றி அழுதது !