பக்கம் எண் :

84 வலம்புரி ஜான்


O

 

பாலைவனக் கப்பல்கள்

ஈச்ச மரங்களைப் பிடுங்கி

மணல் வெளி முழுவதும்

இரங்கற் கவிதை இழைத்தன !

மறைந்தாள் ஆமீனா !

 

O

 

அண்ணல் மீண்டும்

அனாதை ஆனார்.

எத்தனை முறைதான்

அநாதை ஆவார்

எங்கள் பெருமான்

நபிகள் நாதர்?

 

O

 

உம்மு அய்மன்

கன்னத்தில் வழிந்த

கண்ணீர தனில்

உப்பெடுத்துக் கொண்டே

ஊர்வந்து சேர்ந்தாள்.

 

O

 

முகம்மது அவர்களை

பாட்டனார் இடத்தில்

பக்குவப்படுத்தினாள் !

 

O

 

அப்பாமுகத்தைப் பாராமல்

அம்மா அன்பினை நேராமல்