பக்கம் எண் :

நாயகம் எங்கள் தாயகம்97


இளைஞரானார் இனியவர் முகம்மது !

 

O

 

சில இளைஞர்கள் ...

பனைமரங்களைவிட

உயரமாக வளர்ந்தவர்கள் ; ஆனால்

தென்னை மரங்களைவிட

கோணல்களாகி விட்டவர்கள் !

 

O

 

இவர்களின் மத்தியில்

நபிகள் நாயகம்

ஆலமரமாய் அணிவகுத்தார்கள்.

சதையில் சமைந்த

கேள்விக் குறியில்

அடியில் அமைந்த

புள்ளியை இழுக்கும் பாம்படம் போல ...

அளவாய் அசைந்தார் அண்ணல் பெருமான்.

 

O

 

மணலில் படரும்

முந்திரிச் செடிபோல்

முதல்வனைப் பரவ

முந்தி நின்றார்கள் !

 

O

 

இவர் வயதொத்த

இளைஞர் பலரும்