பக்கம் எண் :

98 வலம்புரி ஜான்


வானவில்லை

வளைத்தே எடுத்து -

ஈச்சமரங்களை அம்புகளாக்கி ...

மணலின் முதுகில்

வடுக்களை விதைத்தனர் !

 

O

 

இவரோ ...

விளைபொருள் எச்சிலால்

வேலி அமைத்திடும்

சிலந்தியைப்போல ...

சுற்றிச் சூழச்

சுவர்களை எழுப்பி

தம்மைத் தாமே

சுண்டி இழுத்தார் ;

சுருக்கிக் கொண்டார் !

 

O

 

மற்ற இளைஞர்கள் -

தேனடை போல் கிளைகளிலே

தொங்குவார்கள் ...

தெளிந்த நல்ல நதிகளையே

அள்ளுவார்கள் ...

நிலவினிலே முகம் பார்க்க

ஏறுவார்கள் ...

நித்திலங்கள் போதுமென்று

இறங்குவார்கள் ...

மேகத்தால் முகம் துடைத்துக்

கொள்ளுவார்கள் ...

கொடி மின்னல் அடிவயிற்றில்