காதலன் வந்தான் இயல்-30 மந்திரியைத் தந்திரியைப் படை நடத்தும் தளபதியை, மாண்பு மிக்க தந்தையரைத் தாதியரைத் தனக்குதவி தருமாறு தாழ்ந்து கேட்டும் எந்தவொரு பயனேதும் கிடைக்காது துயருற்று இறுதி யாக சுந்தரியாள் இறைவனிடம் தன்நிலையை முறையிட்டுத் துயில லானாள்! நீங்காத போதைதரும் காதல்மது உண்டதனால் நிலைகு லைந்து தூங்காது பலநாட்கள் விழித்திருந்த இளவரசி தூங்கக் கண்டு தாங்காத பெருஞ்சுமையே தலையிருந்து இறங்கியதாய்ச் சாந்தி கொண்ட பாங்கியர்கள் உண்மைநிலை மன்னருக்குப் பகர்ந்திடவே பறந்து சென்றார்! ஆறாதமனப் புண்ணை ஆற்றிவிடும் காலத்தின் ஆற்ற லாலே தீராத கொடும்பிணியே தீர்ந்துவிடில் அமைதிபெறும் சிந்தை போன்று மாறாத காதலனை அடைவதற்கு இறைதுணையை வருந்தித் தேடிச் சீராகத் துயில்புரியும் சுலைகாவின் அருகிலெழில் சீமான் வந்தார |