பக்கம் எண் :

144


பெருமனமாய் அவருடைய அடிமையரில்

     ஒருத்தியெனப் பெறவே சொல்வீர்!

ஒரு கணமும் இழக்காது உடன்செல்வீர்!

    இன்றேல் யான் ஒழிவேன்!" என்றாள்.

 

"உனதுவிதி இவ்விதமாய் இருந்தக்கால்

     யான்செய்வ தொன்று மில்லை;

எனதுமகிழ் வெல்லாமுன் இன்பமதே

     அல்லாமல் ஏது மில்லை!

நினதுமனம் போலின்றே தூதனுப்பி

     அவரிடத்தே நேரிற் சென்று

மனமறிந்து மணமுடிக்க அழைத்துவரச்

     செய்கின்றேன் மகளே!" என்றார்.

- - x - -