பக்கம் எண் :

145


மயக்கும் அழகு

இயல்-31

 

பொருள் பெற்றிடப் பொருள்விற்றிடப்

     புவிசுற்றிடும் வணிகர்,

இருளற்றிடும் அதிகாலையில்

     இளஞ்சூரிய னொளியில்

பொருள்விற்றிட ‘அனாபீஸ்’ நகர்

     புகுந்தேஒரு புறத்தில்,

பொருள்முற்றிலும் பரப்பிஅரும்

     பொருள்விற்றிட முனைந்தார்!

 

விற்கின் றதில் திறம்பெற்றவர்

     வருவோர் தமை யழைத்துக்

கற்கண்டெனும் சொற்கொண்டவர்

     கனிவாய் விலைகூறி

நிற்கின்றன ரெனினும்பலர்,

     நேராகவே மாலிக்

விற்கும்பொருள் தனைச்சூழ்ந்திட

     வியந்தார் பிறவணிகர்!

 

வாங்கின்றதில் விற்கின்றதில்

     வாய்க்கும் பொதுலாபம்

தாங்கட்கெலாம் உண்டென்பதைச்

     சற்றும் நினைக்காமல்

ஏங்கிமனம் வீங்கிஅவ

     ரெல்லோருமே, மாலிக்

தீங்கேதமக் கிழைத்தாரெனச்

     சினம்பொங்கிட நின்றார்!