என்னிலே உணர்வை ஆக்குவிக்கும் எல்லை யில்லா அருட்கடவுள் தன்னுடைத் துணையாய்த் துவங்குவதாய்ச் சாற்றிய காப்பின் விளைவிதுவோ? தன்னுடைத் தூதர் காவியத்தைத் தானே எழுதித் தந்தனனோ? என்னவென் றிதையே இயம்பிடுவோம்? எல்லாப் புகழும் இறைவனுக்கே! பதியாம் அல்லாஹ் வின் தூதாய்ப் பதியாம் கன் ஆன் பூபதியாய்ப் பதியாம் யாக்கூ பின்மகவாய்ப் பார்புகழ் மிஸ்ரு அதிபதியின் பதிசேர் மதிசேர் அமைச்சாகிப் படியில் தைமூஸ் திருமகளார பதிவிர தாசிரோன் மணியுடைய பதியாய்ப் போந்த பெருமானார், ஆரணம் போற்றும் அழகுருவார் அன்பே வடிவாம் திருவுருவார் காரணச் சரிதம் தீந்தமிழின் கனக முடியின் பெருமணியாய்ப் பூரண மாகச் செய்வித்துப் பொன்றாப் புகழைப் பூண்டனனே! சாரண பாஸ்கரன் அஹ்மதெனும் சம்பன்ன யோக நாவலனே. வாழி அவன் தன் நற்பெயரும் வளர்மதி போன்று வளர்ந்தோங்க வான்தன் காப்பியமும் வன்மை நிலைபெற் றுயர்ந்தோங்கி! வாழி அவன்தன் கோத்திரமும் வளம்பல கெழுமி மிளிர்ந்தோங்கி வாழி வான்பூ உள்ளவரை வான்புகழ் ஓங்கி வாழியவே. சென்னை 1-1-57 | மு. றா, மு. அப்துற் றஹீம் | |