பக்கம் எண் :

150


மங்கலச் சங்கு முழக்கியே இறையின்

      மலரடி வணங்கியே நின்று

"எங்களின் அரசி இல்லற வாழ்வில்

      இன்பமே பொங்குக!" என்றார்.

 

புதுமணமும் புன்னகையும் :

வீடலங் கரித்து வீதிகள் துலக்கி

      விதவிதத் தோரணம் அமைத்து

நாடலங் கரித்து அரண்மனை அடைந்த

      நற்குடி மக்களின் முன்னே

தேடருஞ் செல்வம் சுலைகாவை அழைத்துத்

      திருமணச் சடங்குகள் முடித்தார்!

ஆடவர் பெண்டிர் அனைவரும் வாழ்த்த

      அரும்பினள் புன்னகை சுலைகா !

இன்பமும் துன்பமும் :

தன்மகள் புரிந்த அழகுப்புன் னகையில்

      தன்னையே மறந்த தைமூஸு

"என்மகள் சுலைகா மூன்றுஆண்டாக

      இழந்தநல் லின்பமே இன்று

கண்டுளம் மகிழ்வே கொண்டது எனினும்

      கண்மணி பிரிந்திடும் துயரம்

வென்றிட இயல வில்லையே!" என்று

      விம்மினார், விழிகளைத் துடைத்தார் !

 

தந்தையர் வருந்தத் தோழியர் வருந்தச்

      சபையினர் யாவரும் வருந்தச்

சுந்தரச் சுலைகா பெருமகிழ் வுடனே

      துயர்ப்படும் தந்தையைப் பார்த்து