பாவலர் இசைக்கச் சுலைகாவைத் தங்கப்
பல்லக்கி லேற்றிய தைமூஸ்
ஏவலர் சிலரும், தோழியர் பலரும்
எண்ணிலா இரத்தினப் பொதியும்
காவலர் சூழக் காணிக்கை யாக்கிக்
கவனமாய் ‘மிசுரி’னைச் சேர்க்க
ஏவினர்! முரசு ஒலித்தது; சுலைகா
ஏற்றனள் காதல் யாத்திரையே!
- - x - -