அரும்பாமலர் கொய்யேன், எனை அழைத்தால்வரு கின்றேன். விரும்பாவிடில் நெருங்கேன் எதும் வேண்டில்தரு கின்றேன். கரும்பாகிய மொழிபேசியே களிப்போடிருந் திடுவாய்! ஒருபாபமும் அறியேன்!" என உரைத்தார்முதல் அமைச்சர்! விதியை வேண்டல்: "முன்பேஒரு வரையேமனம் முற்றும் வரித்திடவே பின்பேபிறி தொருவர்கரம் பிடிக்கும்படிக் கனவால் பெண்பேதையை ஏமாற்றிடும் பிழையாற்றிய விதியே! கண்பார்த்திடு இனியாகிலும் கற்பாயினுங் காப்பாய்!" இறையை வேண்டல் : காதல்தரும் நாதன்பெறக் கருணைமறுத் திடினும், சாதல்அளித் தனையோ? அதைத் தரவும்மறுத் தனையே! பாதம்பணி கின்றேன்எனைப் படைத்தஇறை யோனே! காதல்அழித் தனையாயினும் கற்பாயினுங் காப்பாய்!" |