என்றேஅழும் சுலைகாமன
இருள்போக்கிடும் ஒளியாய்
"ஒன்றேஉரைக் கின்றேன்மிக
உறுதியுடன் வாழ்வாய்!
என்றாகிலும் நின்நாயகன்
இங்கேவரல் திண்ணம்
குன்றாதுயர் கற்பே"எனக்
கூறியது நெஞ்சே!
- - x - -