இந்தக் காதலும் வேண்டுமா? "பார்க்கவும் விரும்பி டாமல் படுந்துய ரேனும் சற்றுத் தீர்க்கவும் உதவி டாமல், சிறிதள வேனும் சாந்தி சேர்க்கவும் முடிந்தி டாமல், செய்வதே காத லென்றால் பார்க்கவும் ஆகா!" தென்று பகர்ந்தனள் வெறுப்பாய்த் தோழி. தனிமையில் நஞ்சு: இணைப்பில் தேன் ! "நானெனும் தனிமை கொண்டால் நஞ்செனக் கொல்லும் காதல் தானெனும் எண்ணம் நீக்கித் தன்னலம் யாவும் போக்கில் தேனெனச் சுவைக்க லாகும்; தெரிந்தவர் உணரக் கூடும். வீணுப தேசம் வேண்டாம்" வெடுகெனச் சுலைகா சொன்னாள். இரு உள்ளம் இணைந்தால்:...? "இருவரின் இதயத் துள்ளும் எழுவதே உண்மைக் காதல்; ஒருவரின் உள்ளம் மட்டும் ஒப்பிடில் காதல் அன்றே! இருவரும் இணைந்தால் சொர்க்கம், இல்லையேல் நரக மாகும், மறுத்திடும் யூசுப் எண்ணம் மாற்றுவீர்!" என்றாள் தோழி. |