பக்கம் எண் :

194


விந்தையென எண்ணாதீர் நும்மீது;        

     சத்தியமாய் விளம்பு கின்றேன்.

வந்தனைகள் செய்கின்றேன். வாய்விட்டுக்

     கெஞ்சுகிறேன். வாரீர், வாரீர்!"  

யூசுப் :

நெஞ்சுருக்கும் சுலைகாவின் வார்த்தைகளால்

     குனிந்ததலை நிமிர்த்தி யூசுப்

"கெஞ்சுகின்ற உங்கள்மொழி மிஞ்சுகின்ற

     என்துயரைக் கிளறிற் றல்லால்

கொஞ்சுகின்ற இச்சையினைத் தரவில்லை,

     உறுதியையும் குலைக்க வில்லை!

அஞ்சுகின்ற எனைச்செல்ல அனுமதிப்பீர்"

     எனக்கூறி அப்பால்   சென்றார்!

 

சுலைகா :

பயந்தகலும் யூசுபின் வலக்கரத்தை

     இளவரசி பாய்ந்து பற்றிப்

புயந்தழுவத் துடிதுடித்தாள். ‘வெடுக்’கென்று

     கையிழுத்தார், புலியாய்ச் சீறி

"நயந்தமுறை அத்தனையும் யானுரைத்தும்

     எனைச்சிறிதும் நாட வில்லை;

இயன்றவழி இனியும்மைப் பலவந்தம்

     செய்வதுதான்" என்று சொன்னாள்!  

யூசுப் :

"நீதிக்கும் அஞ்சாமல் நேர்மைக்கும்

     அஞ்சாமல் நினைத்த வாறு

சாதிக்கத் துணிந்தக்கால் சாவுக்கும்

     துணிந்திடுவேன் தவற்றிற் கொப்பேன்!