பக்கம் எண் :

195


பேதித்த நெஞ்சத்தால் பிழைசெய்ய

      முனைந்தீரேல் பின்னும் என்பால்

வாதித்தல் முறையல்ல வழிவிடுக!"

     எனயூசுப் வணங்கிக் கேட்டார்!

சுலைகா:

"வாழ்வுக்கு அழைத்தக்கால் வாராமல்

     சாவுக்கு வலியச் செல்லும்

கீழ்புத்தி படைத்தோரே, ஏதுக்கு

     நீரிந்தக் கிலிய டைந்தீர்?

வாழ்வுக்கு அழைக்கின்றேன் சாவுக்கு

     அழைத்தீரேல் வருவேன் யானும்

தாழ்வுக்கு இலக்காயின் உம்மோடு

     பலியாகத் தயங்கேன்!" என்றாள்.

யூசுப்:

"பாபத்திற் காளாகி உள்ளத்தைப்

     பாழாக்கிப் பண்புள் ளோரின்

சாபத்திற் குள்ளாகிச் செத்தக்கால்

     இறையோன்முன் தப்ப லாமோ?

கோபத்திற் குரித்தாக்கிக் கொடுநரகின்

     உணவாக்கும் கொடிய சாவின்

ஆபத்தை அறிந்திலையோ! அரசகுலத்

     திருமகளே அறிவாய்!" என்றார்.

 

சுலைகா :

"இன்றைக்குச் சுவர்க்கத்தில் மகிழ்ந்திடுவோம்.

     நாளைக்கு இரண்டு பேரும்

சென்றிடுவோம் நரகுக்கு அங்கேயும்

     மனமொத்துச் சேர்ந்தி ருப்போம்