கேடடைந்த காரணம் : "ஆடவரின் பார்வையினில் அரிவையரை விட்டே ஆசைக்கனல் மூட்டிவைத்து இருவரையும் வாட்டும் மூடச்செயல் நீக்கிடுவோம்; சுலைகாவென யாரும் மோகவெறி கொண்டிடாமல் காத்திடுவோம்!" என்று நாடலையும் புதல்வியரை வீடடக்கி வைத்து நகரமெங்கும் தந்தையர்கள் எழில்சுலைகா நெஞ்சம் கேடடைந்த சூழ்நிலையைக் கேலிசெய்ய லானார், கேள்வியுற்று சுலைகாமனம் துடிதுடிக்க லானாள். சுலைகாவின் யோசனை பொருளுடைமை புகழுடைமை பொறுப்புடைமை [யாவும் பொருந்தியுள பலகுடும்பத் தலைவியரைக் கூட்டி அருளுடைமை அறிவுடைமை அழகுடைமை சேர்ந்த ஆணழகர் யூசுபினை அவர்களிடம் காட்டி இருளடைந்த தன்னிலையில் அவர்களையும் ஆக்கி யூசுபெழில் காண்பவர்கள் தனைமறந்து நெஞ்சம் உருகுவது இயற்கையென உணரச்செய்வ தென்று உளத்தினிலே திட்டமிட்டு அமைச்சரையும் [கேட்டாள்! எவ்விதமும் தம்மிழிவை நீக்கிவிடில் போதும் எனும்நினைவால் பெண்களுக்குத் தனிவிருந்து வைக்க ஒவ்வியதும் அமைச்சரஜீஸ் யூசுபுக்கும் கூறி ஒப்பவைத்துக் கிடைக்கரிய உணவுப்பொருள் [சேர்த்தார்! செவ்வியநற் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து பெற்ற செல்வியர்கள், முதியவர்கள் அனைவருமாய்ச் சேர்ந்தே இவ்விருந்து உண்பதற்கு வருகைதர வேண்டி இருதினங்கள் முன்னதாக அழைப்பனுப்ப லானாள். |