அரசரின் அறிவிப்பு: "ஆற்றலுடன் மெய்யன்பும் அமைந்த யூசுப் அறிவித்த அறநெறியை உணர்ந்த மக்காள் ! கூற்றுவனின் வலைப்பட்ட முதல மைச்சர் குடிகளுக்குச் செய்தபணி மறக்கப் போமோ ! ஏற்றமிகும் யூசுபை விலைக்கு வாங்கி இந்நாட்டின் கொடும்பஞ்சம் தணிப்ப தற்கே போற்றுமுயர் தம்பதவி தனையும் யூசுப் பெற்றிடவென் றிறந்தனரோ?" என்றார் மன்னர் ! துன்பத்தில் இன்பம்: ‘இன்றுமுதல் முதலமைச்சர் பொறுப்பு யாவும் யூசுபிடம் ஒப்படைத்தோம் இந்த நாட்டில் என்றுமவர் இப்பதவி ஏற்றி ருப்பார் !" எனமன்னர் இயம்பியதும் மக்க ளெல்லாம் "நன்று, நன்று !" எனத்துயரம் மறந்து சொன்னார். நற்கனவு பலித்ததுபோல் சுலைகா கொண்டாள் ! சென்றனவே பலதிங்கள். யூசுப் நாளும் திரட்டினரே தானியங்கள் களஞ்சி யத்தே ! - - x - - |