கடமையும் காதலும் இயல்-43 அருகினில் நெருங்கும் பஞ்சம் அகற்றிடத் தானி யங்கள் பெருக்கிடும் வழியை ஆய்ந்து பெருந்தகை யூசுப் நிற்க உருகிடும் விழியி னோடு உணர்ச்சியின் வடிவ மாகக் கருகிடும் மலராய், கண்டோர் கலங்கிடச் சுலைகா வந்தாள் ! பன்னெடு நாட்க ளாகப் பார்த்திடா சுலைகா இன்று தன்னிடம் வருதல் கண்டு தயக்கமில் லாது யூசுப் "என்னிடம் எதுவும் பேச எண்ணிடில் எனைய ழைத்தால் நின்னிடம் வருவேன் யானே நேரிலேன் வந்தீர் ?" என்றார் ! "உங்களின் ஏவ லாற்ற உயிரினைச் சுமக்கு மென்னைத் தங்களை ஏவச் சொன்னால் தரணியே நகைத்தி டாதோ ? திங்களைச் சூழ்ந்த மங்குல் திரையினை விலக்க வேண்டி உங்களை அடைந்தேன் !" என்றாள். உள்ளமே தவித்தார் யூசுப் ! |