பக்கம் எண் :

23


‘பெண்ணுக்குப் பிழை செய்த பெரும் பாவம்

தனை எண்ணிப் பேச்ச டைத்துக்

கண்ணுக்கு விருந்தாக நிற்கின்ற          

தெதற்காக......?’   -என்றும்

 

என்றைக்கு நின் விழியில் பட்டேனோ     

அன்றைக்கே எனையழித்துச்

சென்றிட்ட நீ எதற்கே இன்றைக்கு    

என்னில்லம் திரும்ப வேண்டும்?’

 

என்றும்  ஆத்திரத்தோடும்  ஆவேசத்தோடும்  கேட்கும்  சுலைகா,  தான் எப்படி இருந்தவள் எப்படியாகி விட்டேன் என்பதை விளக்கிக் கூறுகையில்:

 

"மணங்கவரும் ரோஜாவாய் மணந்த எனை     

ஏக்கத்தால் மஞ்சள் பூத்தப்

பிணமாக்கிப் பூவரசம் பூவாக்கும்      

ஆசைநோய் பிடிக்கச் செய்து

குணமாக்கும் அருமருந்தும் கொண்டோடி

மறைந்திட்ட கூற்றுவா!..."     என்றழைக்கிறார்.

 

ஒரு பெண் எத்துணை அழகுடையவளாயினும்-என்னதான் அந்தஸ்துடையவளாயினும் ஒரு ஆணின் கைப்பிடிக்கும்போதுதான் அவள் பெருமை சிறக்கும் என்பதை

 

"பிறந்திடும் கொடியி லிருந்திடும் மலர்கள்

பெருமையே பெற்றிடா துதிரும்

பிறந்திடும் மனையி லிருந்திடும் பெண்ணும்

பிறவியின் பெருமையை இழப்பாள்

பிறப்பிட மன்றி புகுமிடம் சிறப்புப்      

பெற்றிடும் மலர்களே பெண்கள்!..." -என்று

எவ்வளவு ஆழகாக எடுத்துக் காட்டி விடுகிறார் கவிஞர்.

     வாதத்   திறமையினால்   தம்   கட்சியை   நிலை   நிறுத்த   முயலும்தேர்ந்த    வழக்கறிஞர்களைப்   போல  யூசுபும்-சுலைகாவும்    வாதிடும்   பாடல்களைத்   திரும்பத்   திரும்பப்  படிக்க