யூசுப் எங்கே? இயல்-20 நெற்றிக்கே நேர்கி ழக்கில் கதிரவன் நின்ற போது நற்றவச் செல்வன் தன்னை அடவிக்கு நடத்திச் செல்ல முற்றிலும் ஏற்ற யாக்கூப் உச்சியில் வெய்யோன் நின்று சுற்றிலும் வெப்பக் காற்றைச் சுழற்றிடச் சிந்தை வெந்தார்! காலையில் சென்ற மைந்தர் கடும்பகல் கடத்தி விட்டே மாலையில் திரும்ப லாகும் என்பதை மறந்த தேபோல் சோலையும் பாலை யாகச் சுட்டெரிக் கின்ற வெப்ப வேளையில் யூசுப் மேனி வேகுமே எனப்ப யந்தார். பதறிடும் யாக்கூப் நெஞ்சப் பயத்தினை அகற்று தல்போல் கதறிடத் தகிக்கும் வெப்பக் கதிரவன் முகம் மறைக்கச் சிதறிய மேகம் ஒன்றாய்த் திரண்டிடக் கண்டு வெய்யோன் பதறியே மேற்கி லோடிப் பதுங்கினான் முகம்சி வந்தான்! |