|
New Page 1
முதற்பாட்டில்,
‘என்னுடைய எல்லையிலே வந்து நின்றான்’ என்றார்; இரண்டாம் பாட்டில், ‘அது பொறுத்தவாறே
அருகே நின்றான்’ என்றார்; மூன்றாம் பாட்டில், தம்முடன் கூட நின்றான் என்றார்; நான்காம்
பாட்டில், ‘ஒக்கலையில் வந்து நின்றான்’ என்றார்; ஐந்தாம் பாட்டில், ‘நெஞ்சிலே வந்து புகுந்தான்’
என்றார்; ஆறாம் பாட்டில், ‘தோளிலே வந்திருந்தான்’ என்றார்; ஏழாம் பாட்டில் ‘நாவிலே வந்து
புகுந்தான்’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘கண்ணுள்ளே நின்றான்’ என்றார்; ஒன்பதாம் பாட்டில்,
‘நெற்றியிலே நின்றான்’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘திருமுடியிலே நின்றான்’ என்றார்;
முடிவில், பலம் சொல்லித் தலைக்கட்டினார். இனி, தம்முடனே பொறுக்கும்படி கலக்கையாலே அவனைத்
தலைமேற் கொண்டார் எனலுமாம்.
(11)
திருவாய்மொழி
நூற்றந்தாதி
இவைஅறிந்தோர்
தம்மளவில் ஈசன்உவந் தாற்ற
அவயவங்கள் தோறும்
அணையும்-சுவையதனைப்
பெற்றுஆர்வத் தால்மாறன்
பேசினசொல் பேசமால்
பொற்றாள்நம்
சென்னி பொரும்
(9)
ஆழ்வார் எம்பெருமானார்
ஜீயர் திருவடிகளே அரண்.
|